முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் மாளிகையை ரஷ்ய படைகள் நெருங்கி வந்தன: ஜெலன்ஸ்கி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      உலகம்
Jelensky 2022 02 26

Source: provided

கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷ்ய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் 3-வது மாதமாக நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கிவ்வையும் குறிவைத்துள்ளனர்.  இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷ்ய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது.   

இது தொடர்பாக ஜெலன்ஸ்கி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

என்னையும், எனது குடும்பத்தினரையும் பிடிக்க ரஷ்ய துருப்புகள் மிக அருகில் வந்தன. போர் தொடங்கிய அன்று நான், மனைவி ஜலேன, 17 வயது மகள் மற்றும் 9 வயது மகன் குண்டு வெடிப்பு சத்தத்தை கேட்டு எழுந்தோம். நான் ரஷ்யாவின் இலக்கு என்பதால் அதிபர் அலுவலகங்கள் பாதுகாப்பான இடம் அல்ல என்பது விரைவில் தெளிவாக தெரிந்தது.

என்னையும், குடும்பத்தினரையும் கொல்ல அல்லது பிடிப்பதற்காக ரஷ்ய தாக்குதல் படை வீரர்கள் தலைநகர் கிவ்வுக்குள் பாரா சூட் மூலம் நுழைந்ததாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எங்களை கைப்பற்ற மிக நெருங்கி வந்தனர். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து