முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் அதிகரிப்பு: சீன ஓட்டல்களில் வரும் 4-ம் தேதி வரை சாப்பிட தடை

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      உலகம்
CHINA-CRONO-2022-05-01

Source: provided

 

பெய்ஜிங், : கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. வர்த்தக தலைநகரான ஷாங்காயில் வேகமாக பரவிய கொரோனா தொற்று, தலைநகர் பெய்ஜிங்கிலும் பரவி வருகிறது.  பெய்ஜிங்கில் கடந்த ஒரு வாரத்தில்  300-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் தின கொண்டாட்டத்துக்கு சீனாவில் நேற்று முதல் 4-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

. விடுமுறை நாட்களில் சாப்பிடுவதற்காக ஓட்டல்களுக்கு அதிகமான மக்கள் செல்வர். தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் ஓட்டல்களில் 4-ம் தேதி வரை சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்சல்கள் மட்டும் வழங்க ஓட்டல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து