முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய சபாநாயகரை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்ற கூட்டம் இன்று கூடுகிறது

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      உலகம்
Sri-Lanka 2022 05 03

Source: provided

கொழும்பு : கடும் பொருளாதார நிதி நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் இன்று (மே. 4) கூடுகிறது. 

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உச்சத்தை எட்டியுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே  பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ள அந்நாட்டு மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமாா் ஒரு மாதமாக நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சொந்தக் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவா்களுடனும், முன்னாள் அதிபா் மைத்ரிபால சீறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திர கட்சியின் நிா்வாகிகளுடனும் அதிபா் கோத்தபய ராஜபட்ச கடந்த வெள்ளிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது பிரதமா் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினர். இதனிடையே, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கடந்த 30-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய சபாநாயகரை தேர்வு செய்ய இன்று புதன்கிழமை இலங்கையில் நாடாளுமன்றம் கூடுகிறது. 

மேலும் அன்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக பிரதான எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டங்களுக்கும் மத்தியில் இலங்கையில் நாடாளுமன்றம் கூட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து