முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 லட்சம் சிறுவர்கள் உட்பட 10 லட்சம் உக்ரைன் நாட்டவர்கள் சிறை பிடிப்பு : ரஷ்யா செய்தி நிறுவன தகவலால் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      உலகம்
2-lakh-boys 2022 05 03

Source: provided

கிவ் : 2 லட்சம் சிறுவர்கள் உட்பட 10 லட்சம் உக்ரைன் நாட்டவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ந்தேதி போர் தொடுத்தது. 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால் ரஷ்யா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

உக்ரைனை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா பல்வேறு நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் முனைப்பாக இருக்கிறது. மேலும் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா அங்குள்ள பொதுமக்களை கைது செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை 2 லட்சம் சிறுவர்கள் உள்பட 10 லட்சம் உக்ரைன் நாட்டவர்களை சிறை பிடித்து வந்திருப்பதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான டாஸ்க் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஜெலன்ஸ்கி யூதர் என்பதால், மிகப் பெரிய யூத எதிர்ப்பின் தொடர்ச்சியே உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் என்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோ தெரிவித்துள்ள கருத்திற்கு, அமெரிக்கா செனட் சபைத் தலைவர்  ஷுமர் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தனது மிருகத்தனமான படையெடுப்பை நியாயப்படுத்த ரஷ்யா முயற்சிப்பது யாரை ஏமாற்றுவதற்கு என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். ரஷ்யாவின் போர் குற்றங்கள் உலகம் பார்க்கும் வகையில் தெளிவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து