முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரியா தகவல்

புதன்கிழமை, 4 மே 2022      உலகம்
Kim 2022 05 04

Source: provided

பியாங்கியாங் : வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. 

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது வட கொரியா அதிர்ச்சி கொடுத்து வருகிறது.  அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது.

இந்நிலையில், வடகொரியா நேற்று முன்தினம் மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.  தலைநகர் பியோங்யங் அருகே உள்ள சுனன் என்ற நகரில் இருந்து  பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அது கிழக்குக் கடல் (ஜப்பான் கடல்) நோக்கி சென்றதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பானின் கடலோர காவல்படையும் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து