முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வழிமுறைகளால் நெருக்கடியை கையாளலாம்: இலங்கை அதிபர் நம்பிக்கை

புதன்கிழமை, 4 மே 2022      உலகம்
Gotabhaya 2022 04

Source: provided

கொழும்பு : புதிய வழிமுறைகளால் நெருக்கடியை கையாளலாம் என்று கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக் கோரி, கடந்த மாதம் 9-ம் தேதியில் இருந்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு கோட்டையில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடான சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறுகையில், 

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய வழிமுறைகளை கையாண்டு அரசியல் பிளவுகளில் இருந்து விலகி செல்ல வேண்டியது அவசியம். புதிய வழிமுறைகளால் நெருக்கடியை கையாளலாம்.

வேலை நிறுத்தங்களால் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுவத்துவதே இதன் பின்னனியில் உள்ள அரசியல் நோக்கம் என்று அவர் கூறினார்.  மேலும் நாளை 6-ம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பு இல்லை என தொழிற்சங்கங்கள் அறிவித்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து