முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிர புயலாக மாறியது 'அசானி': தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

திங்கட்கிழமை, 9 மே 2022      தமிழகம்
Heavy-rain 2022 05 09

Source: provided

சென்னை : தீவிர புயலாக மாறியது 'அசானி'. இதனால் தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் 12-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரப் புயலாக...

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று முன்தினம் காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தீவிர புயலாக நேற்று மாறியுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் நோக்கி நகர்ந்து வலுப்பெற்ற நிலையில் மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்தது. 

இது மேலும் தெற்கு வங்ககடல் பகுதியில் நிக்கோபார் தீவில் இருந்து 870 கி.மீ தொலைவிலும், போர்ட்பிளேயருக்கு மேற்கு வடமேற்காக 730 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் ஒடிசா பூரிக்கு தெற்கு தென்கிழக்கே 680 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

ஒடிசா கடல் எல்லை...

இந்த தீவிர புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியை புயல் நெருங்கும். இன்று (10-ம் தேதி) வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியை நெருங்கக்கூடும். அங்கிருந்து ஒடிசா கடல் எல்லையை ஒட்டிய வடமேற்கு வங்க கடலை அடையலாம். இது அடுத்த 48 மணிநேரத்தில் படிப்படியாக வலுவிழக்க கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒடிஷா - ஆந்திரா...

அசானி புயல் காரணமாக ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும். 11ம் தேதி ஒடிசா, வடக்கு ஆந்திரா, மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். 

15 மாவட்டங்களி்ல்...

தமிழகத்திலும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் காரணமாக 12-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து