முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரையை கடக்காமல் வலுவிழக்க வாய்ப்பு: அசானி புயல் ஒடிசாவை தாக்க வாய்ப்பு இல்லை

திங்கட்கிழமை, 9 மே 2022      தமிழகம்
Heavy-rain 2022 05 09

Source: provided

சென்னை : அசானி புயல் கரையை கடக்காமல் வலுவிழக்க வாய்ப்பு இருப்பதால் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தாது என்று வானிலை இலாகாவினர் கருதுகிறார்கள்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அசானி என்றால் சிங்கள மொழியில் ‘பெருஞ்சினம்’ என்று அர்த்தமாகும். 

இந்த புயல் தீவிர புயலாக நேற்று முன்தினம் இரவு மாறியது. இந்த புயல் மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நேற்று நகர்ந்தது. இது மேலும் தெற்கு வங்ககடல் பகுதியில் நிக்கோபார் தீவில் இருந்து 870 கி.மீ தொலைவிலும், போர்ட்பிளேயருக்கு மேற்கு வடமேற்காக 730 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் ஒடிசா பூரிக்கு தெற்கு தென்கிழக்கே 680 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த தீவிர புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியை புயல் நெருங்கும். இன்று (செவ்வாய்க்கிழமை) வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியை நெருங்கக்கூடும். அங்கிருந்து ஒடிசா கடல் எல்லையை ஒட்டிய வடமேற்கு வங்க கடலை அடையலாம். இது அடுத்த 48 மணிநேரத்தில் படிப்படியாக புயலாக வலுவிழக்க கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. என்றாலும் அது நகரும் போது மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

அசானி புயல் உருவானதை தொடர்ந்து ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் முன் எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக ஒடிசாவில் அதிக பாதிப்பை புயல் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஒடிசாவில் 18 மாவட்டங்களில் இருந்து சுமார் 8 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அசானி புயல் கரையை கடக்காமல் வலுவிழக்க வாய்ப்பு இருப்பதால் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தாது என்று வானிலை இலாகாவினர் கருதுகிறார்கள்.

என்றாலும் அசானி புயலின் தாக்கம் காரணமாக ஒடிசாவின் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும். நாளை முதல் ஒடிசா, வடக்கு ஆந்திரா, மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அசானி புயல் நகர்வு பாதை மற்றும் வீரியத்தில் மாற்றம் ஏற்படுவதை பொறுத்து மழை பொழிவிலும் மாற்றம் ஏற்படலாம் என்று இந்தியா வானிலை இலாகா தெரிவித்துள்ளது. அசானி புயல் மேலும் வலிவிழக்கும் பட்சத்தில் அது கடலோர பகுதியை தாக்குவதற்கு வாய்ப்பு குறைவு என்றும் வானிலை இலாகாவினர் தெரிவித்தனர். அசானி புயலால் மிகப்பெரிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வலுவிழக்கும் நிலைக்கு திடீரென மாறியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து