முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை இரட்டை கொலை வழக்கு: உடல்களை புதைக்க 3 நாட்களுக்கு முன்பே தோண்டப்பட்ட குழி : 3 மாதமாக கொலைக்கான திட்டம் தீட்டியது அம்பலம்

திங்கட்கிழமை, 9 மே 2022      தமிழகம்
Srikanth-Anuradha 2022 05 0

Source: provided

சென்னை : சென்னை மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள், 3 மாதமாக கொலைக்கான திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும், உடல்களை புதைக்க 3 நாட்களுக்கு முன்பே குழ தோண்டப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் ஐடி கம்பெனி அதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அவர்களிடம் ஓட்டுநராகப் பணியாற்றிய கிருஷ்ணா தன் நண்பர் ரவி ராயுடன் இணைந்து கொலை செய்து பண்ணை வீட்டில் உடல்களைப் புதைத்து விட்டு 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் தப்ப முயன்ற போது தமிழக போலீசார், ஆந்திர காவல்துறையின் உதவியுடன் கொலையாளிகளைக் கைது செய்தனர். 

விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, பணத்திற்காக இருவரையும் கொலை செய்ய கிருஷ்ணாவும் ரவி ராயும் கிட்டத்தட்ட 3 மாத காலம் திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. அத்துடன் பிணங்களைப் புதைப்பதற்காக 3 நாட்களுக்கு முன்பே குழி தோண்டி வைத்துள்ளனர். மேலும், பண்ணை வீட்டில் தங்கி இருந்த தனது குடும்பத்தாரை பல்வேறு காரணங்கள் சொல்லி கிருஷ்ணா நேபாளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். 

தொடர்ந்து கைது செய்யப்பட்ட கிருஷ்ணாவும், ரவி ராயும் வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட உள்ளனர். கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகிய இருவரின் மகன் மற்றும் மகள் நேற்று சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது

முன்னதாக நேற்று முன்தினம் மாலை அவர்களது உடலை தோண்டி எடுப்பதற்காக அப்பகுதி மயான ஊழியர்களை  போலீசார் வரவழைத்து தோண்ட துவங்கினர். அப்போது பண்ணை வீட்டில் உள்ள நாட்டு நாய் ஒன்று ஊழையிட்டு அருகிலேயே நின்றது. போலீசார், தடயவியல் நிபுணர்கள் துரத்தியும் அங்கிருந்து போகவில்லை.

ஸ்ரீகாந்த்- அனுராதா இருவரும் பண்ணை வீட்டுக்கு வரும்போது அதற்கு உணவளிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரின் உடல்களும் ஆம்புலன்சில் ஏற்றும் வரை அப்பகுதியை சுற்றி, சுற்றி வந்துள்ளது. பின்னர் ஆம்புலன்ஸ் மணலில் சிக்கியதும் ஓடிவந்து ஆம்புலன்ஸ் முன் நின்றது அனைவரும் துரத்தியதால் சோகத்துடன் சென்றது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து