முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து

வியாழக்கிழமை, 12 மே 2022      தமிழகம்
EPS 2022 03 16

Source: provided

சென்னை : அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போனில் வாழ்த்து கூறினார். 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரின் வீட்டில் நேற்று  தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரை மாநகர் மாவட்ட தலைவர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எம்.பி. சம்பத், கருப்பண்ணன், பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சங்ககிரி சுந்தர்ராஜன், ராஜமுத்து, பாலசுப்பிரமணியம், சித்ரா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், உள்ளூர் மற்றும் வெளியூர் நிர்வாகிகளும் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையொட்டி நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரின் வீட்டு முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொலைபேசியில் பிறந்த நாள்  வாழ்த்து கூறினார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து