முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை நடந்த 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை : தமிழக கல்வித்துறை தகவலால் அதிர்ச்சி

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
Students 2022-05-14

Source: provided

சென்னை : 2.4 லட்சம் மாணவர்கள் இதுவரை நடந்த 10,11,12-ம் வகுப்பு தேர்வுகளில் பங்கேற்கவில்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள்.

பிளஸ்-1 மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். 

மொத்தம் 3,119 மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். உடல்நிலை பாதிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகும்.

இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை நடந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மொத்தமாக 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து