முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசம் - இந்தியா இடையே மீண்டும் ரயில் சேவை துவக்கம்

வியாழக்கிழமை, 19 மே 2022      இந்தியா
Train-2022-05-19

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்கும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. அந்நேரத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. 

தற்போது கொரோனா பரவல் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் குறைந்திருப்பதால், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, டாக்காவிலிருந்து கொல்கத்தா- டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ், வங்காளதேச ரயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் ஆகியவை கொல்கத்தாவிலிருந்து இந்திய ரயில்வே ரேக் மூலம் வரும் 29-ம் தேதி மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து