முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      இந்தியா
Rajasthan 2022-05-22

Source: provided

ஜெய்ப்பூர் : கேரளாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்கிறபோதெல்லாம், அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் உயர்த்துகிற போது அது பொதுமக்களுக்கு பெரும் சுமையாகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் ஒரே வாரத்தில் 5 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கிற உற்பத்தி வரியும், மாநில அரசுகள் விதிக்கும் உள்ளூர் வரிகளும் (மதிப்பு கூட்டு வரி) பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. 

இந்த நிலையில் மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை கணிசமாக குறைத்தது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ. 8 மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ. 6 குறைக்கப்பட்டது. இதனிடையே மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டிருந்தார். 

இதையடுத்து, முதல் மாநிலமாக கேரள அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ. 2.41-ம் மற்றும் டீசல் மீதான வாட் வரியை ரூ. 1.36-ம் குறைப்பதாக அறிவித்தது. இந்நிலையில் ராஜஸ்தான் அரசு நேற்று பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் படி ராஜஸ்தானில் பெட்ரோல் மீதான வரியில் 2.48 ரூபாயும், டீசல் மீதான வரியில் 1.16 ரூபாயும் குறைத்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 10.48 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7.16 குறைந்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து