முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்தார் பா.ஜ.க. எம்.பி.

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      இந்தியா
Arjun-Singh 2022-05-22

Source: provided

கொல்கத்தா : மேற்குவங்காளத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். 

மேற்குவங்காள மாநிலம் பாரக்புரா தொகுதி பா.ஜ.க. எம்.பி. அர்ஜூன் சிங். ஆரம்பத்தில் திரிணாமுல் காங்கிரசில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அர்ஜூன் சிங் கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அதன்பின் அவர் பாரக்புரா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில், அர்ஜூன் சிங் எம்.பி. பா.ஜ.க.வில் இருந்து விலகி நேற்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அர்ஜூன் சிங் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து