முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வெயிலின் அளவு அதிகரிப்பு : லண்டன் ஆய்வாளர்கள் தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      உலகம்
Sun 19-04-2022

Source: provided

லண்டன் : கடந்த மார்ச் - ஏப்ரல் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் காலநிலை பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் காலநிலையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம் காரணமாக வெப்பத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வண்ணம் உள்ளது. கடந்த மார்ச் - ஏப்ரல் காலகட்டத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் காலநிலை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மனிதர்களால் கால நிலை மாற்றம் ஏற்படாமல் இருந்து இருந்தால் இது போன்ற வெப்பம் 3000 ஆண்டுகளுக்கு பின்னரே ஏற்பட்டு இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடப்பு ஆண்டில் கடும் வெயில் காரணமாக 90 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை ஆயிரங்களை தொடும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து