முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை குறித்து பா.ஜ.க. கருத்து கூறாது: மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

புதன்கிழமை, 15 ஜூன் 2022      அரசியல்
Annamalai 2022 05 06

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மாற்றுக்கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் ச.பாஸ்கன் தலைமை வகித்தார். இந்த விழாவின் போது கட்சியில் இணைந்த அனைவரையும் வரவேற்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

அம்பேத்கர் 1951-ல் பண்டித ஜவகர்லால் நேரு தலைமையில் சட்ட அமைச்சராக இருந்தார். ஆங்கிலேயே அரசு சட்டம் மற்றும் நீர் மேலாண்மை பொறுப்புகளை அம்பேத்கர்க்கு வழங்கியிருந்தது. நேரு ஆட்சியில் அம்பேத்கர்க்கு சட்ட அமைச்சர் பதவி மட்டுமே வழங்கியது. நேரு அமைச்சரவையில் நீர் மேலாண்மை பொறுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் அம்பேத்கர். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு கேபினட்டில் சாதாரண பொறுப்புகளை மட்டுமே கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி பட்டியலினத்த சேர்ந்தவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார். குறிப்பாக ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி யாக்கியுள்ளார். சமூக நீதியை காப்பாற்றும் கட்சி பாஜக தான். தமிழகத்தில் சமூக நீதி பற்றி திமுக பொய் பேசி வருகிறது. பட்டியிலன மக்களுக்கு பாஜக செய்துள்ள உண்மையை பற்றி பேசி வருகிறோம். அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சி தான். இந்திய அரசியல் சாசன தலைவராக பரிந்துரை செய்தது ஜன சங்கம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , ஒற்றைத் தலைமை என்பது கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் முடிவு தான்; யாரும் கருத்து சொல்லக்கூடாது. அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து