முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தல்: 11 பேர் மனுத்தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      இந்தியா
Parlimant 2022 06 19

Source: provided

புதுடெல்லி : ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியதில் இருந்து இதுவரை 11 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் முடிவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. வருகிற 29-ந்தேதியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.

தமிழ்நாடு, டெல்லி, மராட்டியம், பீகார், ஆந சேர்ந்த 11 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கல் செய்தவர்களின் ஒருவரின் பெயர் லாலு பிரசாத் யாதவ். முன்னாள் மத்திய மந்திரியும் பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பெயர் கொண்டவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவர் பீகார் மாநிலம் சரண் பகுதியை சேர்ந்தவர் ஆவார். 42 வயதான இந்த லாலு பிரசாத் யாதவ் 2017-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து