முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை நடக்கவிருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-க்கு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2022      இந்தியா
Cauvery 2022-06-15

Source: provided

புதுடெல்லி : நாளை 23-ம் தேதி நடக்கவிருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் கூட்டம் நடக்கும் எனவும், அதற்கு மேல் ஒத்திவைக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டது. இதில் கர்நாடக அரசின் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்பட்ட‌து. இதையடுத்து, தமிழக அரசு, சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், ‘மேகதாது  திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இந்த மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கக் கூடாது என கூறப்பட்டு இருந்தது.  இதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்தார். 

அதை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம்  ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது நாளை 23-ம் தேதி நடக்கவிருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து