முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்: பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      இந்தியா
Pm-Modi-2022-06-24

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் திரெளபதி முர்மு நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை பிரதமர் மோடி,  ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். 

ஜூலை 18-ம் தேதி....

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை மாதம் 18-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. வரும் 29-ம் தேதி முடிகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் பைதபோசி கிராமத்தில் 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி பிறந்தார் திரெளபதி முர்மு. 

பழங்குடியின...

சந்தால் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு ரைராங்பூர் சட்டப்பேரவை தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ.வாக 2000 முதல் 2009 வரை பதவி வகித்தார். 2000-வது ஆண்டு மார்ச் 6 முதல் 2004 மே 16 வரை, பிஜூ ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி வரை அப்பதவியில் நீடித்தார். 

மனு தாக்கல்... 

இந்நிலையில் நேற்று திரெளபதி முர்மு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுவை பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிந்தனர். இதில் பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை எம்.பி. பங்கேற்றனர்.

வெற்றி உறுதி...

திரெளபதி முர்முவின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டதாகவே கருதப்படுகிறது. ஏனெனில், பாஜக கூட்டணியிடம் 48 சதவீத வாக்குகள் இருக்கிறது. ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் முதல் தலைவராக திரெளபதிக்கு ஆதரவளித்துள்ளார். நாட்டின் உயரிய பதவிக்கு தேர்வாக இருக்கும் திரெளபதி முர்மு, சந்தாலி எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆளும் பழங்குடி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். இத்தனை கட்சிகளின் ஆதரவால் திரெளபதியின் வெற்றி உறுதி எனக் கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து