முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வாரம் இருமுறை பால்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      இந்தியா
Schiool-2022-06-24

ராஜஸ்தானில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பால் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. இந்த முயற்சியின் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு அதிகரிப்பதோடு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வருகை விகிதம் அதிகரிக்கும் என்று அரசு நம்புவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 69.21 லட்சம் மாணவர்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பால் பவுடரில் தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் (கல்வி) பவன்குமார் கோயல் தெரிவித்தார். இந்த நாட்கள் விடுமுறை என்றால் அடுத்த கல்வி நாளில் பால் வழங்கப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 150 மில்லி பாலும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 200 மில்லியும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அசாமில் பள்ளிகள் திறப்பு  ஜூலை 26-க்கு ஒத்திவைப்பு

அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.மழை-வெள்ளம் ஒருபுறம் இருக்க பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதால், அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது .மேலும் 30 மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அசாமில் பள்ளிகள் திறப்பு ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ம.பி.யில் புல்டோசரில் திருமண  நிகழ்ச்சிக்கு வந்த மணமகன்..!

பூக்களால் அலங்கரிக்கப்ட்ட புல்டோசரின் முன்புறம் இருந்து மணமகன் திருமண நிகழ்வுக்கு சென்றுள்ளார் திருமண வரவேற்புக்கு குதிரை அல்லது, காரில் தான் பொதுவாக செல்வார்கள். ஆனால் மத்திய பிரதேசத்தில் நடந்த திருமண விழாவில் மணமகன் வித்தியாசமாக புல்டோசரில் சென்றிருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலம், பீடல் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜல்லார் கிராமத்தை சேர்ந்தவர் அன்குஷ் ஜெய்ஷ்வால் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வித்தியாசமான முறையில் தனது திருமணம் நடைபெற வேண்டும் என முடிவு செய்திருக்கிறார் . அதன்படி, பூக்களால் அலங்கரிக்கப்ட்ட புல்டோசரின் முன்புறம் இருந்து அன்குஷ் ஜெய்ஷ்வால் திருமண நிகழ்வுக்கு சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து