முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2022      இந்தியா
eknath-shind-2022-06-23

Source: provided

குவகாத்தி : சிவசேனா அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். 

குவகாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை செயலகத்தின் தகுதிநீக்க நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், மும்பையில் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் இல்லத்தில், பாஜக மூத்த தலைவா்கள் கூடி ஆலோசனை மேற்கொண்டனா்.

இதில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவா் சுதீா் முங்கன்டிவார் பின்னா் செய்தியாளா்களிடம் “உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இந்த விவகாரத்தில் பொறுத்திருந்து பார்க்கலாம் என முடிவு செய்துள்ளோம். இதுவரை ஏக்நாத் ஷிண்டேயுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவரிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் பெறவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிர அரசியலின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக தனக்கு ஆதரவளித்து வரும் எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே நேற்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து