முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      தமிழகம்
Weather-Center 2021 06-30

Source: provided

சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சின்கோனா-10, சின்னகல்லார்-9, வால்பாறையில்- 7 செ.மீ, மழையும் பதிவாகி உள்ளது. ஜூலை 3,4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது.

இன்று லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா, தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த சூறாவளி வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகம், இலங்கை கரையோரம் பலத்த காற்று வீசக்கூடும். 40-50 கி.மீ.வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக மீனவர்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து