முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவ காரணம் என்ன? - வட கொரியா வினோத விளக்கம்

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      உலகம்
Kim 2022 07 02

Source: provided

பியாங்கியாங் : வானில் இருந்து விழுந்த மர்ம பொருளை தொட்டதாலேயே வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வட கொரியா விளக்கம் அளித்துள்ளது. 

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், இது குறித்து அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது வானில் இருந்த மர்மப் பொருட்கள் தங்கள் நாட்டில் விழுந்ததாகவும் அதைத் தொட்டதாலேயே வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் வடகொரியா கூறி உள்ளது.

தென் கொரியாவின் எல்லைக்கு அருகில் இருந்த சில ஏலியன் விஷயங்களைத் தொட்டதாலேயே தங்கள் நாட்டில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக வட கொரியா கூறியுள்ளது. 

மேலும், அந்நிய பொருட்கள் ஏதேனும் தங்கள் பகுதிக்குள் வந்து விழுந்தால் விழிப்புடன் கையாள வேண்டும் என்றும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கும்காங்கின் கிழக்கு மாகாணத்தில் சில அந்நிய பொருட்கள் எங்கோ இருந்து வந்ததாகவும் அதைத் தொட்டதாலேயே 18 வயது ராணுவ வீரர் ஒருவருக்கும் ஐந்து வயதான சிறுவர் ஒருவருக்கும் கொரேனா பாதிப்பு ஏற்பட்டதாக வட கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து