LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழக அமைச்சர்கள் அரசு துறை உயர் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வெள்ளத்தால் கோதை நகர் குலுங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் முக்கியமானது ஆகும் . பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக பக்தி சிறப்புமிக்க இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் அவத ரித்த ஆடிப்பூரத்தன்று திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி வழங்குவது வழக்கம். அப்பொழுது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஜாதி, மத வேறுபாடு மறந்து திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து நிலையம் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்தாம் திருநாள் கருட சேவையும் ஏழாம் திருநாள் ஆண்டாள் ரங்க மன்னார் சயன சேவை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று 1ம் தேதி காலை 9.05 துவங்கியது. முன்னதாக ஆண்டாள் ரங்கமன்னாருக்கு திருமஞ்சனம் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. அதிகாலை 3.30மணி அளவில் ஆண்டாள் ரங்க மன்னார் தம்பதிகள் தோ ளுக்கினியான் வாகனத்தில் புறப்பாடாகி தேரை அடைந்தனர். அப்போது அதிகாலை வேளையில் ஏராளமான பக்தர்கள் ஆண்டாள் ரங்க மன்னாரை வழிபட்டனர். அங்கு கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாரி முத்து பட்டர் பாலாஜி பட்டர் ஸ்டானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் வேதபிரான் சுதர்சன் கோவில் மணியம் கோபி ஆகியோர் பூஜைகள் மற்றும் ஆகம நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தனர்.
சரியாக காலை 9.05 மணிக்கு திரு தேரோட்டம் சிறப்பாக துவங்கியது தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கோவில் தக்கார் ரவிச்சந்திரன் மதுரை அற நிலையத் துறை இணை ஆணையர் செல்லத்துரை விருதுநகர் உதவி ஆணையர் வளர்மதி மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். அப்பொழுது பக்தர்கள் உற்சாகமாக கோபாலா கோவிந்தா என கோஷம் முழங்க திருத்தேர் நான்கு ரத வீதி வழியே இழுத்து வரப்பட்டு பிற்பகல் 12 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது.
தேரினை ஆன்மீக சொற்பொழிவாளர் ராஜாராம் புலவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வர்ணனை செய்து வழி நடத்திச் சென்றனர். தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அன்னதானம் பேருந்து மருத்துவம் குடிநீர் கழிப்பிட வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. தேரோட்டம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டாள் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்ட விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி தாரணி ஸ்ரீவில்லிபுத்தூர் சிறார் பாலியல் குற்ற தடுப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த், மாவட்ட மருத்துவத்துறை இயக்குனர் முருகவேல் , சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கப்பாண்டியன் சீனிவாசன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மல்லி கு ஆறுமுகம் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, ரங்கராஜ் பாண்டே, மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் ஜவகர் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சத்ய நாராயணன் திருத்தங்கள் திரு நின்ற நாராயண பெருமாள் கோவில் செயல் அலுவலர் தேவி விருதுநகர் சுவாமி கோவில் செயல் அலுவலர் லட்சுமணன் அறநிலையத்துறை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆய்வாளர்கள் முத்துப்பாண்டி, மணிகண்டன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவகுமார் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட எஸ்பி மனோகரன் தலைமையில் 3 ஏ.டி.எஸ். பிக்கள் ஆறு டி.எஸ். பிக்கள் 19 இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் பெண் போலீசார் ஊர் காவல் படையினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் மதுரை அற நிலைய துறை இணை ஆணையர் செல்லதுரை கோவில் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் திரு கோவில் அலுவலர்களும் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 6 hours 14 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 2 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 5 hours ago |
-
50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் குழு
17 Aug 2022லாஸ் ஏஸ்சல்ஸ் : 1973-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 17-08-2022.
17 Aug 2022 -
7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை
17 Aug 2022பெய்ஜிங் : அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
-
கென்ய அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோ வெற்றி: வன்முறை வெடித்ததால் பதற்றம்
17 Aug 2022கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
-
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு
17 Aug 2022வாஷிங்டன் : நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
-
3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் : கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு
17 Aug 2022சென்னை : 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
-
இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகை: ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு
17 Aug 2022இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
-
அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
17 Aug 2022சென்னை : அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
உடல்நலம் குறித்து சோனியாவிடம் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
17 Aug 2022புதுடெல்லி : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: 16 கண் பால மதகுகள் மூடல்
17 Aug 2022மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்ததால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்டது.
-
யோகி ஆதித்யநாத்துக்கு இடமில்லை: பா.ஜ.க. பாராளுமன்ற குழுவிலிருந்து நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் விடுவிப்பு
17 Aug 2022பா.ஜ.க.வில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்தது : டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
17 Aug 2022புதுடெல்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இலங்கையில் அவசரநிலை நீட்டிக்கப்பட மாட்டாது : அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Aug 2022கொழும்பு : இலங்கையில் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உலகின் ஆறு சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு தேர்வு
17 Aug 2022பெங்களூரு : உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.
-
எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படி இருக்கும் : ஓ.பி.எஸ். பேட்டி
17 Aug 2022சென்னை : எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
சசிகலா புரடக்சன்ஸ் வெளியிடும் 3 புதிய படங்கள்
17 Aug 2022சினிமா தயாரிப்பு நிறுவனமான சசிகலா புரடக்சன்ஸின் துவக்கவிழாவும், இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புது
-
புதிதாக 9,062 பேருக்கு தொற்று: இந்தியாவில் சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
17 Aug 2022இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
-
ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
17 Aug 2022டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த வெற்றி: ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் பேட்டி
17 Aug 2022அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.
-
2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
17 Aug 20222-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
-
அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு
17 Aug 2022வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
17 Aug 2022மெரினாவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
-
கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Aug 2022கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
17 Aug 2022வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
-
பொறியியல் தரவரிசை பட்டியல்: முதல் 5 இடங்களை பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள்
17 Aug 2022பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.