முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 21-ம் தேதி மும்பையில் கட்டப்படவுள்ள ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல்:: முதல்வர் ஷிண்டேவுக்கு நேரில் அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
Eknath-Shinde 2022-08-07

Source: provided

மும்பை : மும்பையில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பதி கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு, மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய இருவரை தேவஸ்தான அறங்காவலர் சுப்பாரெட்டி பூங்கொத்து கொடுத்து அழைப்பு விடுத்தார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையான் கோயில் கட்டுவது என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி மகராஷ்டிர அரசு நவி மும்பை உல்வே பகுதியில் ரூ. 500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சமீபத்தில் வழங்கியது.

இங்கு ஏழுமலையான் கோயிலை தன் சொந்த செலவில் கட்டித்தர பிரபல துணி நிறுவனமான ரேமாண்ட்ஸ் முன் வந்தது. இந்நிறுவனம் இதற்காக ரூ. 60 முதல் 70 கோடி செலவிட்டு ஏழுமலையான் கோயிலை கட்டித்தர உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய இருவருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இருவரும் நேரில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததாக அறங்காவலர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து