முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயத்தேவர் மறைவு: ஓ.பி.எஸ். இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      தமிழகம்
OPS 2022-07-26

Source: provided

சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.எனும் மாபெரும் இயக்கத்தை துவங்கியதற்கு பிறகு முதன் முறையாக நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க.வுக்கு வெற்றிக் கனியை பறித்து கொடுத்தவரும், இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தவரும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றியவருமான மாயத்தேவர் உடல்நலக்குறைவு காரணமாக சின்னாளபட்டியில் நேற்று காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

மாயத்தேவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் மாயத்தேவரின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இன்று(நேற்று)முதல் 3 நாட்கள் அ.தி.மு.க. கொடிகள் அனைத்து இடங்களிலும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து