முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை வென்று விட்டோம்: வடகொரிய அதிபர் கிம் பெருமிதம்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      உலகம்
Kim-Jong-Un-2022 08 11

கொரோனாவை வென்று விட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். 

வடகொரியாவில் கொரோனா பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. இதன் காரணமாக அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் முதல் வட கொரியாவில் 48 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. எனினும், வடகொரியா இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. 

இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், கொரோனாவை வென்று விட்டதாக மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கிம் ஜாங் அன் கூறுகையில், நம் மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. மீண்டும் ஒருமுறை நாம் இந்த உலகிற்கு நமது சிறப்பை உணர்த்தியுள்ளோம். நம் மக்களின் அசைக்கமுடியாது உறுதிக்கு எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து