முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா - உக்ரைன் போரை நீட்டிக்க முயற்சி: அமெரிக்கா மீது அதிபர் புதின் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      உலகம்
Putin 2022-08-16

Source: provided

மாஸ்கோ : உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெறும் சண்டை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டினார்.

மேலும் அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் தைவான் பயணத்தை குறிப்பிட்டு பேசினார். இது குறித்து பேசிய அதிபர் புதின், மோதல் பகுதிகளில் போரை நீட்டிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவர் பேசியதாவது, "இந்த மோதலை நீடிக்க அமெரிக்கா முயல்வதையே உக்ரைன் நிலைமை காட்டுகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா பகுதிகளிலும் அமெரிக்கா அதையே செய்ய முயற்சிக்கிறது.

தைவானுக்கு சென்ற அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் பயணம், ஒரு தனிப்பட்ட பொறுப்பற்ற அரசியல்வாதியின் பயணம் மட்டுமல்ல, தைவான் பிராந்தியத்திலும் உலகின் பிற பகுதிகளிலும், நிலைமையை சீர்குலைத்து குழப்பமடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்படும் அமெரிக்க உத்தியாகும்". இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து