முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசியக்கோப்பை போட்டியில் கோலி பார்முக்கு திரும்புவார் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
BCCI 2022 01 13

Source: provided

புதுடெல்லி : ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி வருகிற 28 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் விராட் கோலி மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர் தடுமாற்றம்...

2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முன்னாள் கேப்டன் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை. அவர் சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் அவரை பல முன்னாள் வீரரகள் விமர்சித்து வருகிறார்கள். அவரது பார்ம் ஆசிய கோப்பை ,உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

கங்குலி நம்பிக்கை...

இந்த நிலையில் விராட் கோலி குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது., அவர் பயிற்சி செய்யட்டும், போட்டிகளில் விளையாடட்டும். அவர் ஒரு பெரிய வீரர் மற்றும் நிறைய ரன்கள் எடுத்துள்ளார். அவர் மீண்டும் பார்முக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரால் சதம் அடிக்க முடியவில்லை, ஆசிய கோப்பையில் அவர் தனது பார்மை கண்டுபிடிப்பார் என்று நான் நம்புகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி வருகிற 28 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து