முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து 1,85,000 கனஅடி நீர் வெளியேற்றம் : தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கின

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Mettur-Dam 2022-08-31

Source: provided

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. 

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,85,000 கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் நீர் முழுமையாக நீர் மின் நிலையங்கள் வழியாகவும் உபரி நீர் போக்கி வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

உபரி நீர் போக்கியில் வினாடிக்கு 1,62,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் உபரி நீர் போக்கி கால்வாய் வெள்ளக்காடாக காணப்படுகிறது. சங்கிலி முனியப்பன் கோவில் அருகே மேட்டூர் எடப்பாடி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை மின் நிலையத்திற்கு சாம்பல் வரும் ஏற்றிச் செல்லும் லாரிகள் அவ்வழியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல அவழியாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.   

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.   அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 1,85,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,62,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.  

தற்போது காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மலை தனிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உபரி நீர் போக்கி கால்வாய் பகுதியில் அமைந்துள்ள அண்ணா நகர், பெரியார் நகர் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மேட்டூர் வட்டாட்சியர் எச்சரித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து