முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்டெமிஸ் ராக்கெட் நிலவுக்கு ஏவுவது மீண்டும் ஒத்திவைப்பு நாசா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      உலகம்
Aardemis 2022-09-25

Source: provided

நியூயார்க்: நாசாவின் ஆர்டெமிஸ் ராக்கெட் 27-ம் தேதி ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், புயல் காரணமாக ராக்கெட் ஏவுவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969-ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு விண்வெளி ஆராய்ச்சில் ஈடுபட்டு வரும் நாசா, தற்போது மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை துவங்கியுள்ளது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்டெமிஸ் - 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. 

இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான, ஓரியன் விண்கலத்தை சுமந்து செல்கிறது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்டெமிஸ் - 1 ராக்கெட் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு முறை ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ராக்கெட் மீண்டும் 27-ம் தேதி ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், புயல் காரணமாக ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்த ராக்கெட்டை மீண்டும் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து