முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். தலைவர் பதவி போட்டியில் இருந்து விலக மாட்டேன்: சசிதரூர்

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2022      இந்தியா
Sasi-Tharoor 2022--10-08

Source: provided

 புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் பதவி போட்டியில் இருந்து விலகப் போவதில்லை என்று சசிதரூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் காந்தி குடும்பத்து ஆதரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.

மேலும் சசிதரூரை போட்டியில் இருந்து வாபஸ் பெற பலர் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி மறுத்துள்ளார். தங்கள் குடும்பம் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் தேர்தல் நியாயமாக நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்த சூழலில் தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலக சசிதரூர் முடிவு செய்திருப்பதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை சசிதரூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனக்கும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் நடப்பது நட்பு போட்டி. இதில் இருந்து நான் விலகப்போவது இல்லை. ஓட ஆரம்பித்து விட்டேன். இனி நிறுத்தப் போவதில்லை. இறுதி வரை போராடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து