முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புர்ஜ் கலிபா அருகே 35 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2022      உலகம்
Dubai 2022-11-07

Source: provided

துபாய் : துபாய் டவுன்டவுனில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபா கட்டிடத்தின் அருகில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டவுன்டவுனில் உள்ள எமார் பவுல்வார்டு வாக் கட்டிடத்தில் அதிகாலை 2.20 மணியளவில் தீப்பற்றியது.

இதனையடுத்து, தீயானது வேகமாக கட்டிடத்தின் மேல்நோக்கி பரவத்தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை எழும்பியது. விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை 4.00 மணியளவில் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து