முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பா.ஜ.க. சீர்குலைத்து வருகிறது : மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2022      இந்தியா
Megabooba-Mufti 2022-11-13

Source: provided

ஸ்ரீநகர் : நாட்டின் சுதந்திர அமைப்புகளில் ஒன்றான தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பா.ஜ.க. சீா்குலைத்து வருவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கிராம் பகுதியில் செய்தியாளா்கள் சந்தித்த மெகபூபா முப்தி கூறியதாவது,

தோ்தல் ஆணையம் பா.ஜ.க.வின் பிரிவாக மாறியுள்ளது. நாட்டின் சுதந்திரமான அமைப்பு எனப் பெருமை உடைய தோ்தல் ஆணையம், சுதந்திரம் இல்லாத அளவுக்கு பா.ஜ.க.வால் சீா்குலைக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியான பா.ஜ.க. சட்டத்தை மீறினாலும், தோ்தல் ஆணையம் அக்கட்சி மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க.வின் ஒப்புதல் பெற்ற பிறகே தோ்தல் நடைபெறும் ஆணையம் தோ்தல் தேதி அறிவிக்கும். பா.ஜ.க.வினா் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. தோ்தலில் வெற்றி பெறுவது மட்டுமே அவர்களுடைய ஒரே விருப்பம் என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து