முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியா நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு : 700-க்கும் மேற்பட்டோர் காயம்

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      உலகம்
Indonesia 2022-11-21

Source: provided

ஜகார்தா : இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவானது. நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது.

இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்தநிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டது. ஏராளமான வீடுகள் இருளில் தவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து