முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      உலகம்
China 2022 11 25

சீனாவின் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனாவின் வடமேற்கு பகுதியான ஜின்ஜியாங் மாகாணம் உரும்கியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மள மளவென பற்றி எரிந்ததில் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி இருளில் மூழ்கியது. தீ வேகமாக பரவியதால் அந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். 

இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் மூச்சு திணறியும், உடல் கருகியும் பரிதாபமாக இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து