முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே அதிகரிப்பு : அமைச்சர் நாசர் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
Nasser 2022-11-04

Source: provided

சென்னை : தமிழகத்தில் வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது. மக்கள் பயன்படுத்தும் பாலின் விலை உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார். 

சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் மேலும் கூறியதாவது, 

அகில இந்திய அளவில் தமிழகத்திலேயே பால் விலை குறைவு. அதுவும் ஆவின் பாலின் விலை மிக குறைவு. இதுவே, தனியார் பாலாக இருந்தாலும் அல்லது பிற மாநிலங்களில் உள்ள, குறிப்பிடும்படியாக குஜராத்தின் பிரசித்தி பெற்ற அமுல் போன்ற பிற பால் நிறுவனங்களின் பாலின் விலையை பற்றி பா.ஜ.க.வினர் பேச வேண்டும்.

அவற்றின் விலையை விட ஆவின் பால் விலை தமிழகத்தில் குறைவு.  ஆவினில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து