முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூரில் ஹாக்கி வீரருக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணை: முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்      விளையாட்டு
Stalin 2021 11 29

அரியலூரில் இளம் ஹாக்கி வீரரின் ஓடுகள் வேயப்பட்ட வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முதல்வர்,  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம் குரும்பஞ்சாவடி திட்டப் பகுதியில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையையும் அவர்களுக்கு வழங்கினார். 

அரியலூர் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் கார்த்திக். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரது தந்தை செல்வம் வங்கியில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் வீட்டு வேலை செய்கிறார். ஏழ்மையான நிலையிலும் கார்த்திக்கிற்கு விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டு அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். பெங்களூருரில் அமைந்துள்ள சாய் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற கார்த்திக், இந்திய ஆக்கி அணிக்குத் தேர்வானார். இருப்பினும், பயிற்சி பெறுவதில் அவருக்கு போதிய பண வசதி இல்லாமல் தவித்து வந்தார். 

இது பற்றிய தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முதல்வர் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அப்போது அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கார்த்திக்கின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்தார். இதற்கிடையே 2 நாட்கள் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்திக் குடும்பத்தினரை ஓடுகள் வேயப்பட்ட அவர்களது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். 

அப்போது ஆக்கி வீரரின் பெற்றோரிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர்கள் வசிப்பதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம் குரும்பஞ்சாவடி திட்டப் பகுதியில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார். சிறிது நேரம் இருந்த அவர் வெளியே வந்த போது அப்பகுதியை சேர்ந்த திரளான சிறுவர்கள் முதல்வரை பார்ப்பதற்காக காத்திருந்தனர். அவர்களிடம் உற்சாகமாக பேசிய முதல்வர் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து