முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டோ கட்டண விவகாரத்தில்தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2015 அக்டோபருக்கு பின் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம் செய்யப்படவில்லை என வழக்குரைஞர் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுநர்கள் தாங்களாகவே உயர்த்தி வசூலிப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதில் தர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து