முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதி அமைச்சர் ரகுபதி பேட்டி

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      தமிழகம்
Ragupati 2022-12-01

Source: provided

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கவர்னர் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. 

கவர்னர் ஒப்புதல் அளிக்க பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக கவர்னர் சில விளக்கம் கேட்டிருந்தார். அதை தொடர்ந்து கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை கவர்னர் ஆய்வு செய்து வருகிறார். 

இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நேற்று கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை ராஜ்பவனில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கவர்னருக்கு நேரில் விளக்கம் அளித்தோம். கவர்னர் சில சந்தேகங்கள் கேட்டார். அதற்கு பதிலளித்தோம். ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கவர்னர் உறுதி அளித்துள்ளார் என்று கூறினார். மேலும், இதுவரை 21 மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என எந்த கால நிர்ணயமும் கிடையாது. எனவே குறிப்பிட்ட காலத்தை நிர்ணயிக்கும்படி நாம் கேட்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து