முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை வெள்ளத்தில் மிதக்கும் பிரேசில் 17 நகரங்களில் அவசர நிலை பிரகடனம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      உலகம்
Brazil-Rain 2022-12-02

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பிரேசில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 17 நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரேசில் நாட்டில் பாரானா மற்றும் சாண்டா கேடரன் உள்பட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். உயிர் பிழைப்பதற்காக அவர்கள் வீட்டு மாடிகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். 

பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நடந்து வருகிறது. 

தெற்கு பிரேசில் பாரானா மாகாணம் போலாரது என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் இறந்தனர். அந்த சமயம் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று கொண்டிருந்தன. நிலச்சரிவில் அந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது. 

இதில் அந்த வாகனங்களில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர் மழையால் பிரேசிலில் 17 நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து