முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் மண் சரிவில் சிக்கி 7 தொழிலாளர்கள் பலி

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      இந்தியா
Chhattisgar 2022-12-02

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

சத்தீஸ்கரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் மல்கான் கிராமத்தில் உள்ள சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் கிராம மக்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த சுரங்கத்தில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இந்த மண்ச்சரிவில் முதற்கட்டமாக 12 பேர் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேரை மீட்க்கும் முயற்சியில் காவல்துறை, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இந்த மண் சரிவில் சிக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து