முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கனியாமூர் தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடக்கம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      தமிழகம்
Kallakurichi 2022 12 05

Source: provided

கள்ளக்குறிச்சி : கலவரத்தால் மூடப்பட்டிருந்து கனியாமூர் தனியார் பள்ளி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று (டிச.5) காலை திறக்கப்பட்டது. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சில மாதங்களுக்கு முன் மாணவி ஒருவர் இறப்பு தொடர்பாக போராட்டக்காரர்கள் பள்ளி மற்றும் அதன் வளாகத்தை தீக்கரையாக்கினார். இதனால் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வாடகை கட்டிடங்கள், வேறு பள்ளிகள் மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்றது.

விருப்பமுள்ள மாணவர்கள் மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொண்டு மற்ற பள்ளியிலும் தங்களை இணைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினர். இந்நிலையில் பள்ளி முழுவதும் சீரமைக்கப்பட்டு கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரடி கள ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினர். நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனைகளுடன் பள்ளி திறக்க அனுமதி வழங்கப்பட்டு நேற்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன. அதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்திருந்தது. இதற்கிடையே பள்ளி மீண்டும் செயல்பட துவங்கியதை அடுத்து அங்கு போலீஸார் நேற்று முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து