முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் பதவிக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்: தமிழிசை

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      தமிழகம்
Tamilisai 2022 12 06

கவர்னர் பதவி என்பது முதல் குடிமகன் என்பதால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தெலுங்கானா மாநில கவர்னரும், துச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

அரசியலமைப்பின் தந்தை சட்ட மேதை அம்பேத்கர். அவரது நினைவு நாளை போற்றுவதில், மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். ஜி-20 மாநாட்டிற்கு நாம் தலைமை தாங்குகிறோம். ஜி-20 மாநாடு குறித்து வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி, ஆளுநர், துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். 

ஜி-20 மாநாட்டின் பெருமை குறித்து கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தெலுங்கானா மற்றும் புதுவையில் நடத்த இருக்கிறோம். கவர்னர் பதவி என்பது ஒரு முதல் குடிமகன். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். முழுமையாக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று வழக்கு தொடர்வது சரியல்ல என்பதுதான் என்னுடைய கருத்து. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து