முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி, தடங்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு மாடு முட்டி சிறுவன் பரிதாபமாக பலி

சனிக்கிழமை, 21 ஜனவரி 2023      தமிழகம்
Jallikattu 2023-01-06

Source: provided

தருமபுரி : தருமபுரி, தடங்கம் பகுதியில் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்தார்.

தருமபுரி அருகே தடங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த விழாவில் 700 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 7-வது சுற்று முடிவில் மாடுகள் வெளி வரும் வழியில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற 15 வயது சிறுவனை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து