இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் 1960-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீஸ், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஆணையத்தின் சம்பந்தப்பட்ட ஆணையர்கள் மூலமாக ஜனவரி 25-ம் தேதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது., "இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதன் நோக்கம், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தின் விதிமீறல்களைச் சரிசெய்வதற்கான இருநாடுகளின் பேச்சுவார்த்தைக்கு வர பாகிஸ்தான் அரசுக்கு 90 நாட்களுக்கு வாய்ப்பளிப்பதேயாகும். இந்த நடைமுறை கடந்த 62 ஆண்டுகளில் கற்றுக்கொண்ட பாடங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் உதவும்.
சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா எப்போதுமே ஒரு சிறந்த கூட்டாளியாக செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், ஒப்பந்த ஷரத்துக்களை மீறுவதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதிலும் பாகிஸ்தான் அரசின் செயல்பாடுகள், இந்தியாவை ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதற்கான நோட்டீஸ் அனுப்பும்படி நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு, இந்தியாவின் கிஷங்கங்கா மற்றும் ரடில் நீர்மின் திட்டங்களுக்கான தொழில்நுட்ப ஆட்சேபங்களை ஆய்வு செய்ய ஒரு நடுநிலை நிபுணரை நியமிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்தது. பின்னர், 2016-ல் தன்னிச்சையாக இந்தக் கோரிக்கையை திரும்ப பெற்ற பாகிஸ்தான் தனது ஆட்சேபனை தொடர்பாக நடுவர் நீதிமன்றத்தை நாடியது.
பாகிஸ்தானின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை, தகராறுகளைத் தீர்ப்பதற்கான சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தின் பிரிவு IX-க்கு முரணானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஒரு நடுநிலை நிபுணரை நியமிக்கும்படி இந்தியா தனியாக கோரிக்கை விடுத்தது.
ஒரு கேள்வி தொடர்பாக, ஒரே நேரத்தில் 2 நடைமுறைகளைத் தொடங்குவது, அவைகளின் சீரற்ற முரண்பாடான, சட்டங்களுக்கு புறம்பான விளைவுகள், முன்தீர்மானிக்க முடியாத, ஏற்றுக்கொள்ளமுடியாத சூழல்களை உருவாக்கும். இது சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். கடந்த 2016-ம் ஆண்டு இதனை ஏற்றுக்கொண்ட உலக வங்கி, ஒரேநேரத்திலான இரண்டு நடைமுறைகளை நிறுத்துவதற்கான முடிவினை எடுப்பதற்கும், இதனை தீர்ப்பதற்கு சரியான வழிமுறைகளை கண்டறிவதற்கும் இந்தியா - பாகிஸ்தான் வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்து தீர்வு காண்பதற்கு இந்தியா முயற்சி செய்தது. ஆனாலும், 2017 முதல் 2022 வரை நடந்த சிந்து நதிக்கான நிரந்தர ஆணையத்தின் ஐந்து கூட்டங்களிலும் இதுகுறித்து பேச பாகிஸ்தான் மறுத்து விட்டது.
பாகிஸ்தான் அரசின் தொடர் வற்புறுத்தல் காரணமாக சமீபத்தில் உலக வங்கி, நடுநிலை நிபுணர் மற்றும் நடுவர் நீதிமன்றம் ஆகியவை குறித்த நடவடிக்கை எடுத்தத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகள் சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்ததின் எந்த ஷரத்தையும் உள்ளடக்கி இல்லை. பாகிஸ்தான் அரசின் இவ்வாறான தொடர் எதிர்நடவடிக்கைகளால் நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 3 days 12 hours ago |
கீரை ஆம்லெட்![]() 6 days 11 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 3 days ago |
-
டுவிட்டரில் புதிய விதிகளை அறிவித்த எலான் மஸ்க்
28 Mar 2023வாஷிங்டன் : டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15-ம் தேதி முதல் வெரிபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்துள்ளார். இத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 28-03-2023.
28 Mar 2023 -
சவுதியில் பஸ் விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலி
28 Mar 2023ரியாத் : சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலியாகினர்.
-
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுகளை சார்ந்தது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
28 Mar 2023கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு, மாநில அரசுகளை சார்ந்தது என்ற தகவல் மக்களவையில் வெளியாகி உள்ளது.
-
டெட் தாள் 2- தேர்வு முடிவுகள் வெளியீடு
28 Mar 2023சென்னை : டெட் தாள் 2- தேர்வு முடிவுகளை ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வினர் கடுமையாக போராட தயாராக வேண்டும் : பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்
28 Mar 2023புதுடெல்லி : கடுமையாக போராட தயாராகுங்கள் என்று பாராளுமன்ற பா.ஜ.க. கூட்டத்தில் பா.ஜ.க.வினருக்கு பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
-
7-வது பொதுச்செயலாளர்: அ.தி.மு.க.வின் அதிகாரம் மிக்க பதவியில் எடப்பாடி பழனிசாமி
28 Mar 2023அ.தி.மு.க.வில் அதிகாரம் மிக்க பெரிய பதவியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார்.
-
அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்: ரூ. 15 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
28 Mar 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவி
-
6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம்
28 Mar 2023மதுரை : தமிழக அரசில் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு
-
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் மேல்முறையீடு: இரு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணை
28 Mar 2023அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ்.
-
எனது ஆட்டத்திறனுக்கு பிராட்மேனுக்கும் பங்கு : சச்சின் டெண்டுல்கர் உருக்கம்
28 Mar 2023மும்பை : எனது கிரிக்கெட் ஆட்டத்திற்கு பிராட்மேனுக்கு முக்கிய பங்குண்டு என்று தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், எனக்கு நம்பிக்கை கொடுத்தது அவரின் அறிவுரைகள்தான் என்றும்
-
காலில் காயம் காரணமாக ஐ.பி.எல்.லில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச மாட்டார்: மைக்கேல்
28 Mar 2023சென்னை : காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். தொடரில் பந்து வீச மாட்டார் என்று சி.எஸ்.கே.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி: அன்புமணி வாழ்த்து
28 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப். 23-ல் துவக்கம் : மே. 02-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது
28 Mar 2023மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
பெரம்பூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கொலை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத நிலை உள்ளது : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
28 Mar 2023சென்னை : பெரம்பூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
புதிய நீதித்துறை சீர்திருத்த சட்டம் தற்காலிக நிறுத்தம் : இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்
28 Mar 2023ஜெருசலேம் : புதிய நீதித்துறை சிர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார்.
-
ஷேவாக்கை நினைவு கூர்ந்த சி.எஸ்.கே.
28 Mar 2023சென்னை : புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வீரேந்தர் சேவாக் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008-ம் ஆண்டு நேற்றை தினத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக
-
ரூ.2 ஆயிரத்து 753 கோடி மதிப்பில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் தகவல்
28 Mar 2023சென்னை : ரூ.2 ஆயிரத்து 753 கோடி மதிப்பில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று துவங்குகிறது : 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி
28 Mar 2023பழனி : பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு : மத்திய அரசு தகவலால் மகிழ்ச்சி
28 Mar 2023புதுடெல்லி : உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, பகுதி 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
எம்.பி.பி.எஸ். சீட்வாங்கி தருவதாக ஏமாற்றிய ஜெமினிகணேசன் பேரனின் மனைவி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
28 Mar 2023சென்னை : எம்.பி.பி.எஸ்.
-
மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் இதுவரை 258.06 கோடி பயண நடைகள்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
28 Mar 2023தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன.
-
மெஸ்ஸியை கவுரவித்த கால்பந்து கூட்டமைப்பு
28 Mar 2023கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
-
சபரிமலையில் இருந்து திரும்பிய போது தமிழக அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து 64 பேர் காயம்
28 Mar 2023பத்தனம்திட்டா : கேரளாவில் சபரிமலையில் இருந்து திரும்பிய போது தமிழக அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து 64 பேர் காயமடைந்தனர்.
-
7,000 ஊழியர்கள் பணிநீக்கம்: டிஸ்னி நிறுவனம் நடவடிக்கை
28 Mar 2023வாஷிங்டன் : உலகின் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி தனது நிறுவனத்தில் இருந்து 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாக