முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசூதி தாக்குதலில் 100 பேர் பலி: பாக். பாதுகாப்பு துறை அமைச்சர் வேதனை

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      உலகம்
Pak 2023 02 01

Source: provided

லாகூர் : பாகிஸ்தான் மசூதி தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் பலியான நிலையில், பயங்கரவாதத்தின் விதைகளை நாங்கள் விதைத்தோம் என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. 

கடந்த திங்கட்கிழமை மதியம் மசூதியில் வழக்கம் போல் தொழுகை நடந்து கொண்டிருந்த போது நடந்த வெடிகுண்டு தாக்குதலில்  தொழுகை செய்து கொண்டிருந்த பலர் உயிரிழந்தனர். இந்த பலி எண்ணிக்கை நேற்று 100 ஆக உயர்ந்துள்ளது. 170 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது பற்றி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசும் போது, தொடக்கத்தில் இருந்து நாங்கள் பயங்கரவாதத்திற்கான விதைகளை விதைத்தோம்.  இந்த தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்திய நபர், இறைவணக்கத்தின் போது, தொழுகை நடைபெறும் பகுதியில் முன்னால் நின்று கொண்டிருந்து உள்ளார்.

இந்தியா அல்லது இஸ்ரேல் நாடுகளில் கூட இறைவனை வழிபடும்போது யாரும் கொல்லப்படுவதில்லை. ஆனால், அது பாகிஸ்தானில் நடந்து உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து