முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு முதல் கடலூர் வரை கி.வீரமணி தலைமையில் இன்று சமூகநீதி பாதுகாப்பு பயணம் துவக்கம்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Veeramani 20221 02 02

Source: provided

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயணம் ஈரோட்டில் இன்று (3-ம் தேதி) தொடங்கி 10-ம் தேதி கடலூரில் நிறைவடைகிறது. 

இந்த பயணத்தில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். 

குமாரபாளையத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் ஈரோட்டில் மாலை 7 மணிக்கு நடக்கிறது.  கட்சி, ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து நடைபெறும் இந்த பரப்புரை பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு தரும்படி திராவிடர் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அண்ணாவின் நினைவு நாளில் கி.வீரமணி திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து