முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-ம் கட்டமாக மார்ச். 5, 6-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2023      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

சென்னை : கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 3-ம் கட்டமாக மார்ச் 5, 6-ம் தேதிகளில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

இதையடுத்து 2-ம் கட்டமாக சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.  முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கள ஆய்வில் பங்கேற்றனர். 

இந்த நிலையில், 3-ம் கட்டமாக தென் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதன்படி மார்ச் 5, 6-ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கள ஆய்வுப் பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். மேலும் மாவட்ட கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், விவசாய பிரதிநிதிகளுடன் முதல்வர் ஆலோசானை நடத்த உள்ளார். மேலும் விவசாயிகள், சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு பிரதிநிதிகளையும் முதலவர் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து