முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி மாத பிரதோஷம்: சதுரகிரியில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      ஆன்மிகம்
Chaturagiri 2023 03 19

Source: provided

விருதுநகர் : சதுரகிரி மலைக்கோவிலில் நேற்று பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நேற்று பங்குனி மாத பிரதோஷம் மற்றும் 21-ம் தேதி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் நேற்று முதல் 22-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். 

10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்து உள்ளது. 

இந்த நிலையில் சதுரகிரி மலைக்கோவிலில் நேற்று பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து